இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ச தனது புதிய அரசில் அமைச்சர்களை நியமனம் செய்து வருகின்றார்.
அதேவேளை தனது அரசுக்கு தேவையான அனைத்து பதவி நிலைகளிலும் மாற்றம் செய்து வருகின்றார்.
எனினும் இதுவரை தனது பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றில் நிரூபிக்காத காரணத்தால் ஆதரவை திரட்டும் பொருட்டு பலவிதமான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இதன் பொருட்டு தனக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களை கவரும் வண்ணம் அவர்களுக்கு அமைச்சு பதவிகள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் , மற்றும் பலவிதமான பதவி நிலைகளை வாரி வாரி வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் படி , அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் மஹிந்த அரசின் பேச்சாளர்களாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரண்டு பிரதமர்கள் இருக்கும் நாட்டில் இரண்டு அமைச்சரவை பேச்சாளர்கள் இருந்தால் என்ன குறையவா போகிறது?