இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான நிலைமை நீடிக்குமானால் இலங்கையில் இனிமேல் தேசிய நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படாது என வட.மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்புச் சபையின் ஊடாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை தற்போது தற்காலிகமான வெற்றியினை பெற்றுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
சர்வதேசத்திற்கு புரிய இன்னும் எவ்வளவு நாள் தேவைப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ச்சியாக அரசியல் ரீதியான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடிக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது“ என தெரிவித்தார்.