Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி

August 26, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி

நாட்டுக்கு தேவையான 4 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்களை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது.

இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 4 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகிப்பதற்கான திகதிகள் மற்றும் பெயர்கள் பற்றிய விபரம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் குறித்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார அழுத்தத்தை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும், சர்வதேச சந்தையில் உணவு மற்றும் எண்ணெய் விலை உயர்வு, பாதிக்கப்படக்கூடிய சமூகத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், அந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க உலக சுகாதாரம் ஸ்தாபனம் தயாராக உள்ளதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் அத்தியவசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் தேவையான அவசர உதவிகளை வழங்குமாறு ‘உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசரகால சுகாதார வேலைத்திட்டத்திற்கு’ பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் மற்றும் ஏனைய அமைச்சுகளுடன் இணைந்து அத்தியவசிய மருத்துவப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுகாதாரக் கட்டமைப்பின் செயல்திறன் மற்றும் தாங்கிக்கொள்ளும் திறன் உள்ளிட்ட மக்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை உலக சுகாதார ஸ்தாபனம் உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும், இலங்கையில் மாகாண சுகாதார சேவைகளை வலுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை உலக சுகாதார அமைப்பு வழங்குவதாகவும் வைத்தியர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வெளிநாடுகளுக்குச் செல்லும் அரச ஊழியர்கள் டொலர்களை அனுப்ப வேண்டியது கட்டாயம் | நிதி அமைச்சு

Next Post

கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் வீடு கொள்வனவு

Next Post
கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் வீடு கொள்வனவு

கொழும்பில் 400 மில்லியன் ரூபா செலவில் ராஜபக்சவினர் வீடு கொள்வனவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures