Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறந்ததாக கருதி மகன் பால் ஊற்றியபோது திடீரென்று எழுந்து உட்கார்ந்த விவசாயி

December 16, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
இறந்ததாக கருதி மகன் பால் ஊற்றியபோது திடீரென்று எழுந்து உட்கார்ந்த விவசாயி

மாண்டவர் மீண்டார் போன்ற அதிசய நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்ந்தாலும் அது அவர்களின் உறவினர்களிடம் மட்டுமல்லாமல் அப்பகுதியில் பல நாட்கள் வரை பேசும்பொருளாக இருக்கும்.

அப்படி ஒரு சம்பவம் தான் இந்தியாவில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60), விவசாயி. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமரவாதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சண்முகம் திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். பின்னர் நோயாளி காவு வண்டி மூலம் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர். ஊரை நெருங்கிய போது மயங்கிய நிலையில் இருந்த சண்முகம் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடினர்.

பின்னர் அவரது வீட்டின் திண்ணையில் சண்முகத்தை வைத்தனர். அவரது மகன் சுப்பிரமணியன் அவருக்கு பால் ஊற்றினார்.

சிறிது நேரத்தில் சண்முகம் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டன. இதனைக்கண்ட உறவினர் ஆச்சரியத்துடனும், பதட்டத்துடனும் அவரை பார்த்தனர். சிலர் அவரின் அருகே அமர்ந்து சத்தம் போட்டு கூப்பிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த சண்முகம் பேசத்தொடங்கினார். உடல் நலமும் சீராகி இருந்தது. இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.

Previous Post

குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச் சென்ற ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள்

Next Post

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் மரணம்

Next Post
வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் மரணம்

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures