யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சபை அனுமதி இன்றி தன்னிச்சையாக Smart Lamp Poles பொருத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிமாட் பொலுடன் இணைக்கப்படும் கண்காணிப்பு கமெரா மற்றும் தொலைத்தொடர்பு அன்ரனா போன்றவை பொருத்தப்படுவதற்கான காரணம் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பம் சார் விடயங்கள் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று காலை யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் வ.பார்த்தீபன், இ.ரஜீப் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியபோதே அவர்கள் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.