பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென் மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகள் அனைத்திலும் இன்று (22) தாதியர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று கலை 7.00 மணி முதல் நாளை (23) காலை 7.00 மணி வரையில் இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது