முன்னாள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இவ்வாறு முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கடல் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடகடல் நிறுவனத்தின் தலைவர் S.T.பரமேஸ்வரனையும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.