இன்றில் இருந்து 6 மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன ஊடக மத்திய நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வின் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நடைபெறும் செயற்பாடுகள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
இதன் காரணமாகவே பாராளுமன்ற அமர்வுகளை வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடாக ஒலிபரப்புவதற்கு தீர்மானம் மேற்கொண்டோம்.
அத் தீர்மானம் வெற்றி அளித்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார். உலக பாராளுமன்றங்களுக்கிடையே இலங்கை பாராளுமன்றம் சிறப்பம்சம் கொண்ட ஒரு பாராளுமன்றமாகவும் திகழ்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.