சமீபத்தில் வெளியான எக்ஸ் வீடியோ என்ற படத்தில் நடித்தவர் ரியாமிகா. கதை கேட்காமல் தலைப்பு கேட்காமல் அந்தப் படத்தில் நடித்து விட்டேன் இனி கவனமாக இருப்பேன் என்கிறர் ரியாமிகா. அவர் மேலும் கூறியதாவது:
எக்ஸ் வீடியோஸ் படத்தின் இயக்குனர் என்னை ஒப்பந்தம் செய்தபோது முழுக்கதையையும் சொல்லாமல் நான் நடிக்கும் காட்சிகளை மட்டும் சொல்லி சம்மதிக்க வைத்தார். அதுமட்டுமல்ல படத்தில் ஒப்பந்தமான பின்னரே படத்தின் டைட்டிலே என்னவென்று எனக்கு தெரிய வந்தது. முழுப்படத்தை பார்த்ததும் தான் என்னுடைய காட்சிகளை கதையுடன் எப்படி இணைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. திரையுலகில் ஒருபக்கம் பாராட்டுக்கள் வந்தாலும், நெருங்கிய நட்பு வட்டத்தில் இந்தப்படத்தில் நீ நடித்திருக்கத்தான் வேண்டுமா என விமர்சனங்களும் கிடைத்தன.
இனிவரும் நாட்களில் முழு கதையையும் கேட்டுவிட்டே நடிக்க திட்டமிட்டுள்ளேன். இனி அடுத்தடுத்து ஒப்புக்கொள்ள போகும் படங்களில் தனது கேரக்டர்களிலும் கவனம் செலுத்துவேன். தற்போது அகோரி என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். சி.வி.குமார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறேன்.