இந்த வருடத்தில் நிச்சயமாாக புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்துள்ளது. அவ்வாறான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (17) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற தினேஷ் குணவர்தன தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியின் 22ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.
இவ்வருடத்தில் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தை பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.