தனது தங்கையை காண இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் . இந்த சம்பவம் குறித்து விபரம் வருமாறு. இலங்கை நாட்டை சேர்ந்தவர் சின்னகருப்பையா மகன் தாமரைக் கண்ணன் (42).
இவரது தங்கை பெயர் வசுமதி, கணவர் முரளிதரனுடன் மதுரை அம்பலகுளத்தில் தாமசித்து வருகிறார். முரளிதரனின் தகப்பனார் முனியாண்டி கடந்த மாதம் 26ம் தேதி காலமாகி விட்டார். அவரது 30வது நாள் சடங்கு வியாழனன்று நடைபெற்றது . இதில் பங்கேற்பதற்காக தாமரைக் கண்ணன், இலங்கையில் இருந்து போலியான ஆவணங்கள் மூலம் தூத்துக்குடி வந்துள்ளார். இதுதொடர்பாக தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர்.