Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘ஆஸ்திரேலிய சித்திரவதை கூடங்களில் இருந்து வெளியேறுகிறேன்’ | ஈரானிய அகதி 

March 8, 2022
in News, World
0
‘ஆஸ்திரேலிய சித்திரவதை கூடங்களில் இருந்து வெளியேறுகிறேன்’ | ஈரானிய அகதி 

ஆஸ்திரேலிய அரசால் சுமார் 9 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதியான மெஹ்தி அலி, சமீபத்தில் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவில் நிரந்தரமாக மீள்குடியமர்த்தப்படுவதற்காக அமெரிக்காவுக்கு பயணமாகி இருக்கிறார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த மெஹ்டி அலியும், அவரது உடன்பிறவா சகோதரர் அட்னானும் தமது 15வது வயதில் இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சம் அடைந்தவர்கள். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த மெஹ்தி அலி, தனது ஆஸ்திரேலிய தடுப்பு அனுபவத்தின் வலியை தி கார்டியன் ஊடகத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், “நவுருத்தீவில் உள்ள முகாமில், முதல் ஆண்டில் சிறைவைக்கப்பட்ட போது பெரும்பாலான தஞ்சக்கோரிக்கையாளர்கள் மன அழுத்தத்துடன் இருந்ததை கண்டேன். தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு இறந்த அகதியை கண்டதே எனது வாழ்க்கையின் மோசமான நிகழ்வாகும். அந்த நவுருத்தீவு முகாமில் நானும் எனது உடன்பிறவா சகோதரனான அட்னானும் 6 ஆண்டுகள் இருந்தோம்,” என்கிறார்.

“6 ஆண்டுகளுக்குப் பின்னர் பயணமாவதற்கு(ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல) தயாராகும் படி அதிகாரிகள் சொல்லினர். நமது இருண்ட காலம் முடிந்து விட்டது. நாம் சுதந்திரத்தை கொண்டாட தயாராக வேண்டும் என அட்னானிடம் சொல்லினேன். ஆனால், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இறங்கிய சில நிமிடங்களில் எங்களது நம்பிக்கைகள் தகர்ந்து போயின. நாங்கள் விமான நிலையத்திற்கு அருகாமையில் இருந்த தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டோம். பின்னர், கங்காரு பாய்ண்ட் எனும் ஹோட்டல் தடுப்புக்கு மாற்றப்பட்டோம்,” என்கிறார் அலி.

கிறிஸ்துமஸ் தீவிலிருந்து பல தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்ட இவர்கள், பின்னர் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கு பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட பின் மருத்துவ தேவை கருதி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 3 ஆண்டுகள் ஹோட்டல் தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், மெஹ்தி அலியும் அட்னானும் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படுவதற்காக தற்போது அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இவ்விடுதலை இந்த அகதிகளுக்கு மகிழ்ச்சியாக கொடுக்கவில்லை என்கின்றனர்.

“எனது நண்பர்கள் கண்ணீருடன் தடுப்பு முகாமில் உறங்கும் பொழுது, நான் மகிழ்ச்சியாக உணர்வது சுயநலமிக்கது மற்றும் தவறானது,” என தடுப்பில் உள்ள சக அகதிகளுக்காக மெஹ்தி அலி வருந்துகிறார்.

 

Previous Post

Retirees, It May Be Time To Get Your Head Out Of The Sand

Next Post

வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிப்பு

Next Post
அடுத்த வருடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை

வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures