பலப்பிட்டிய பிரதேசசபைக்கு முன்பாக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பான சூழல் நிலவியது.
அமைச்சர்கள் மங்கள சமரவீர, தலதா அத்துக்கோறள ஆகியோர் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களிற்கு எதிராக கோசமிட்டபடி பௌத்த பிக்குகள் தலைமையிலான ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பொதுஜன பெரமுனவை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் சமிந்து குமார, பிரதேசசபை கட்டடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார். தீவிரவாதத்தை தூண்டிய அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இந்த போராட்டங்கள் நடந்தபோதும், பலப்பிட்டிய பிரதேசசபை அமர்வு இடம்பெற்றது.