ஆப்கானிஸ்தானில் கடத்திவைக்கப்பட்டிருக்கும் தம்பதியினரை நிபந்தனையின்றி விடுவிக்க கனடா கோரியுள்ளது.
ரொறொன்ரோ-திங்கள்கிழமை கனடிய மனிதரும் அவரது அமெரிக்க மனைவியையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என கனடா கோரியுள்ளது. ஆப்கானிஸ்தான் கடத்தல்காரர்களினால் கடத்தப்பட்டிருக்கும் தங்களை அரசாங்கம் தலையிட்டு விடுவிக்க கோரி இவர்கள் ஒரு புதிய வீடியோ மூலம் மன்றாடுவதை கண்ணுற்றதை தொடர்ந்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடியரான ஜோசுவா பொயில் மற்றும் அமெரிக்கரான கெயிட்லன் கோல்மன் இருவரும் 2012-ல் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டனர் என யுரியுப்பில் பதிப்பேற்றப்பட்ட வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
தங்கள் நிலைமை நகைப்பிற்கிடமான ஒரு கெட்ட கனவு என தெரிவித்த கொல்மன் தங்களை விடுவிக்குமாறு இரு அரசாங்கங்களையும் கேட்டுள்ளார்.
தங்கள் தாய் சீர்குலைக்கப்படுவதை தனது பிள்ளைகள் பார்த்துள்ளனரென இவர் தெரிவித்தார்.
சிறைப்பட்டிருந்த காலத்தில் இரு பிள்ளைகள் பிறந்தன என தனது குடும்பத்திற்கு தெரிவித்தார்.
குறிப்பிட்ட வீடியோ குறித்து தனது அரசாங்கம் அறிந்திருந்ததென கனடிய உலக விவகாரங்களின் செய்தி தொடர்பாளர் Michael O’Shaughnessy கூறினார்.
இவர்களது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்ததுடன் நிபந்தனையற்ற விடுதலை கோரியுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ புலனாய்வு குழுவின் தளத்தின் -தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆன்லைன் மூலம் பொது மக்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
தம்பதியர் இருவரும் 2012கோடை காலத்தில் ரஸ்யா, மத்திய ஆசிய நாடுகள் போன்ற இடங்களிற்கு பயணம் செய்து பின்னர் ஆப்கானிஸ்தான் சென்ற பின்னர் மறைந்து விட்டனர். 2012-ற்கு பின்னர் இவர்களிடமிருந்து தகவல் கிடைக்கவில்லை.