Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆபத்தான எந்தவொரு சட்டத்தையும் மொட்டு ஆதரிக்கமாட்டாது – மகிந்த திட்டவட்டம்

April 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகியவற்றை அரசு கொண்டுவரும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆபத்தான எந்தவொரு சட்டத்தையும் மொட்டு ஆதரிக்கமாட்டாது - மகிந்த திட்டவட்டம் | Mahinda Speech About His Party

அவர் மேலும் தெரிவித்ததாவது பொதுஜன பெரமுன ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவர்.

மொட்டு ஆட்சி சர்வாதிகாரமுடையது அல்ல

கட்சியுடன் பேசித்தான் கட்சி தொடர்பான நிலைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். எனினும், இதுபோன்ற மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது.

ஆபத்தான எந்தவொரு சட்டத்தையும் மொட்டு ஆதரிக்கமாட்டாது - மகிந்த திட்டவட்டம் | Mahinda Speech About His Party

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெறும் கட்சி அல்ல. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அரசும் கூட.

மொட்டு ஆட்சி சர்வாதிகார அரசு இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மக்கள் பக்கம் நின்று நாட்டின் நலன் கருதியே நாம் முடிவுகளை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார். 

Previous Post

புதுவருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!

Next Post

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டமுதல் பிரதமர் நான்தான் – தமிழ் புத்தாண்டு நிகழ்வில் நரேந்திர மோடி

Next Post
இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து – புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமருக்கு கடிதம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டமுதல் பிரதமர் நான்தான் - தமிழ் புத்தாண்டு நிகழ்வில் நரேந்திர மோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures