நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவேன் எனவும், விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வேன் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (09) அநுராதபுரத்தில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையிலுள்ள சகல இராணுவத்தினரையும் நான் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் விடுதலை செய்வேன். இராணுவத்தினருக்கு ஓய்வுதியம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
நாட்டுக்காக அர்ப்பணித்த அபிமானமிக்க இராணுவ வீரர்களை தற்போதைய அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.