மலையாளத்தில் பார்வதி தற்போது நடித்து வரும் படம் ‘உயரே’. இந்தப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிப்புக்கு ஆளான பெண்ணாக நடிக்கிறார் பார்வதி. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மன உணர்வுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக சமீபத்தில் ஆக்ராவுக்கு சென்ற பார்வதி, அங்கே இருக்கும் ஷீரோஸ் ஹேங்-அவுட்’ என்கிற ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த ரெஸ்டாரன்ட்டில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோனோர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, தங்களது முகப்பொலிவையும் தோற்றத்தையும் இழந்தவர்கள் தான். மேலும் சிலர் வேறுவகையில் தங்கள் தோற்றத்தில் பாதிப்புக்கு ஆளானவர்கள்.. இந்த ரெஸ்டாரன்ட் முழுக்க முழுக்க இவர்களாலேயே நடத்தப்படுகிறது.
இவர்களிடம், தான் அப்படி ஒரு கேரக்டரில் நடிப்பது குறித்து பேசிய பார்வதி, அவர்களின் உணர்வுகளை உன்னிப்பாக உள்வாங்கிக் கொண்டாராம். இந்தப்படத்தில் நடிப்பதற்கு அது ரொம்பவே உதவியாக இருந்ததாம். இந்தப்படத்தில் பார்வதிக்கு மேக்கப் போடுவதற்காக பெங்களூரை சேர்ந்த பிரபல மேக்கப் கலை நிபுணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.