விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜீத்குமார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜீத்துடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தை அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதுவரை 30 சதவிகிதம் படப்பிடிப்புதான் முடிந்துள்ளது. இப்போதுதான் அஜீத் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில், படத்தை மே 1-ந்தேதி வெளியிட வேண்டும் என்பதால், வேகவேகமாக படப்பிடிப்பு நடத்துகிறாராம் எச். வினோத். அதைப்பார்த்த அஜீத், இவ்வளவு வேகம் வேண்டாம். படத்தை தரமாக வெளியிட வேண்டும். மே 1-ந்தேதி வெளியிட வேண்டாம் என்பதற்காக அவசரம் காட்ட வேண்டாம். ஆகஸ்டு 15ல்கூட படத்தை வெளியிடலாம். அதனால் நிதானமாக படப்பிடிப்பு நடத்துங்கள் என்று கூறிவிட்டாராம்.
ஆக, விஸ்வாசம் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அஜீத் விவேகமாக செயல்படத் தொடங்கியிருப்பதால், பிங்க் ரீமேக் மே1-ந்தேதி அல்லாமல் ஆகஸ்டு மாதம்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.