Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே ஜே.ஆர். ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்தார் – செல்வம்

July 28, 2022
in News, Sri Lanka News
0
யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன ஆயுத போராட்டத்தை தோற்றுவித்தார். ஜனநாயக மக்கள் போராட்டத்தை தவறான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

தமிழர்கள் கொல்லப்பட்ட போது எவரும் குரல்கொடுக்காமலிருந்தது கவலைக்குரியது. வெலிகடை சிறைச்சாலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் எங்கே என்பதை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (27) இடம்பெற்ற அவசரகால சட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிகாலத்தில் தான் அவசரகால சட்டம் இயற்றப்பட்டதுடன், இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

இனபடுகொலை 39ஆவது வருடத்தை கடந்துள்ளது.வெலிகடை சிறைச்சாலையில் இனபடுகொலையின் 39வது வருடத்தை ஜூலை படுகொலை கரிநாளாக எமது தமிழ் தேசம் நினைவு கூர்கிறது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துறை குட்டிமணி அவர்களோடு மரித்த ஜகன், நடேஷ தாசன் மற்றும் தேவன் உட்பட 53பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் சபையில் எவரும் நினைவுப்படுத்தவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொண்டு,படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவசரகால சட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ள விவாதத்தில் சிங்கள மக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பெரிதளவில் பேசப்படுகிறது.

சிங்கள மக்கள் தாக்கப்பட்டமை வன்மையாக தண்டிக்கத்தக்கது. காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு ,கிழக்கு உட்பட மலையகத்தில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி சிறையை நிரப்புவதற்காக தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டு,கைது செய்யப்பட்ட போது எவரும் குரல் கொடுக்காமலிருந்தது கவலைக்குரியது.

தமிழர்களின் போராட்டம் பயங்கரவாதமே கருதப்பட்டது. தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஜே.ஆர் ஜெயவர்தன முறையற்ற வகையில் செயற்பட்டதை தொடர்ந்து தான் ஆயுத போராட்டம் ஆரம்பமானது. ஆகவே தற்போதைய ஜனநாயக போராட்டத்தை தவறான முறைக்கு கொண்டு செல்லும் சூழலை ஏற்படுத்த வேண்டாம்.

அவசரகால சட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கிறது. வெலிகடை சிறைச்சாலை படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் எங்கு புதைக்கப்பட்டது என்பதை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிட வேண்டும் என்றார்.

Previous Post

எரிபொருளை பெற்றுக்கொள்ள விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

Next Post

இலங்கைப் பாணியில் ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டகாரர்கள்

Next Post
இலங்கைப் பாணியில் ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டகாரர்கள்

இலங்கைப் பாணியில் ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டகாரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!

May 29, 2026

Recent News

நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!

May 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures