Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி!

March 20, 2018
in News, Politics, World
0

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகிய முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாகவும் இதனை இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணியின் ஒரு பகுதியை இராணுவத்திற்கு சுபீகரிப்பதற்கு கிராம அலுவலர் ஊடாக துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் இந்த காணி இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமது உறவுகளை நினைத்து வருடத்தில் ஒரு முறையேனும் தாம் கண்ணீர் விட்டு அழுது தமது சோகங்களை போக்குவதாகவும், அதற்கு அனுமதிக்காது எமது துயிலுமில்ல காணியில் பப்பாசி செய்கை செய்வதோடு தேநீர் சாலை ஒன்றையும் நடாத்தி வருகின்றனர்.

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி!

தற்போது இந்த இடத்தின் ஒரு பகுதியை நிரந்தரமாக அபகரித்து நிரந்தரமாக இராணுவ முகாம் அமைக்க முயல்வது வேதனை அளிப்பதாகவும் ,இந்த காணியை இராணுவத்துக்கு வழங்காது தமது உறவுகளை நினைந்து வருடத்தில் ஒரு முறையேனும் தாம் கண்ணீர் விட்டு அழுது தமது சோகங்களை போக்குவற்கு சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரனிடம் வினவியபோது….

அலம்பில் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியினை சூவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தும் பிரதேச மக்களிடம் நான் தொடர்பு கொண்டு கேட்டபோது சில இடங்களில் சுவீகரிப்பின் நடவடிக்கைக்கான அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று. மாவீரர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் உறவுகளை பறிகொடுத்த அனைவரும் அந்த துயிலும் இல்லத்தில் ஆண்டில் ஒருதடவை கண்ணீர்விட்டு கதறி அழுது தங்கள் மனவேதனையினை போக்கும் நாளாக காணப்படுகின்றது.

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி!

கடந்த ஆண்டு மக்கள் எல்லா இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களின் பிணைப்பினை காட்டி வெளிப்படுத்தி நின்றார்கள்.

இவ்வாறு இருக்கும் போது படையினர் எங்கெங்கு காணிகளை சுவீகரிக்கமுடியுமோ அங்கங்கு சுவீகரித்து மிகவும் முக்கியமான வரலாற்று இடங்களில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதனை நோக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரை மிக அதிகமாக குவித்துவைத்துக்கொண்டிருக்கும்.

இலங்கை அரசானது தொடர்ந்தும் மக்களின் நெஞ்சங்களில் ஏறி மிதிக்கும் செலயாக நாங்கள் இதனை பார்க்கின்றோம் இது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள காணிகளை விட்டு படையினர் வெளியேறவேண்டும் சுவீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது.

இது மக்களின் உதிரத்தோடு இருக்கும் காணிகள் மக்கள் தங்கள் உறவுகளை நினைத்து நெஞ்சம் உருகின்ற தன்மைக்கு அரசாங்கம் விட்டுக்கொடுக்கவேண்டும்.

இது மீறும் பட்சத்தில் இது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாமல் இதற்கான விளைவுகளை பொறுப்பெடுக்கவேண்டிய நிலை சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Previous Post

வாயு கசிவு காரணமாக 34 பேர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதி

Next Post

போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் அதிரடி

Next Post
போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் அதிரடி

போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் அதிரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026

Recent News

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures