Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி அறிவிப்பு

November 13, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி அறிவிப்பு

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் ‘புஷ்பா 2 -தி ரூல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி பிரத்யேகப் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா 2 -தி ரூல்’ எனும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் , எதிர்வரும் 17 ஆம் திகதியன்று மாலை 6:00 மணி அளவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். 

இதனால் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் அனைவரும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 

மேலும் இந்த முன்னோட்டம் இணையத்தில் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூலை விட இந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் 200 கோடியை கடக்கும் என்றும், மொத்த வசூல் இந்திய மதிப்பில் 600 கோடியை கடக்கும் என்றும் திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

டிக் டொக் காதலனால் பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட நிலை

Next Post

இலங்கையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு வந்ததா?

இலங்கையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures