இலங்கையில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன அவர்களின் பணிப்பின் பேரில் மரணதண்டனை விதிப்பதற்கான அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்ப்பதற்கான நேர்முக தேர்வுக்கு திகதியும் அறிவிக்கப்பட்டது. மேலும் இன்றைய தினம் அப்பதவிக்கான முதற்கட்ட தேர்வு நடைபெற்றது. எனினும் 102 விண்ணப்ப படிவங்களில் 79 படிவங்களே பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
எனவே பரிசீலனைக்குட்படுத்திய விண்ணப்ப படிவங்களில் 39பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர் இருப்பினும் 19 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். அவர்களில் பட்டதாரி ஒருவரும் நோமுகத்தேர்வுக்கு சமுகமளித்திருந்தார். மேலும் சாதாரண தரம் மற்றம் உயர்தரம் கற்றவர்களும் சமுகமளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.