நெதர்லாந்து நாட்டில் உள்ள மியூசியத்தில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பிகாசோ ஓவியம் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல அருங்காட்சியங்களை அலங்கரித்துள்ளன. அதன்படி நெதர்லாந்த் நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ல ஒரு அருங்காட்சியகத்தில் பிகாசோ வரைந்த 7 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த ஓவியங்கள் 2012ம் ஆண்டு திருடப்பட்டது. திருடப்பட்ட ஓவியங்களை மீட்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அதன்பின்னர் ஓவியங்களை திருடு போனதில் தொடர்புடைய ருமேனியர்கள் கைது செய்யப்பட்டு 2014ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், திருடப்பட்ட ஓவியங்கள் கண்டுப்பிடிக்கவில்லை. இந்நிலையில் அந்த ஓவியங்கள் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை ருமேனியாவில் உள்ள துல்சியா கவுண்டியில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
நெதர்லாந்தை சேர்ந்த மீரா பெட்டிகு என்பவர் திருடு போன ஒவியங்களை கண்டறிந்து, நெதர்லாந்து தூதரகத்தில் ஒப்படைத்தார். இந்த ஓவியத்தின் மதிப்பு 9 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் என கூறப்பட்டுள்ளது. ருமேனிய அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள அந்த ஓவியங்கள் பிகாசோவின் உண்மையான ஓவியம்தானா என உறுதிபடுத்தப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

