Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்ருதா ஜெயலலிதாவின் மக்கள் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகன்

February 2, 2018
in News, Politics, World
0

ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பது பொய்யானது, மரபணு சோதனை கோர, அவருக்கு உரிமையில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபக் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விசாரணை, வரும்,20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த, அம்ருதா தாக்கல் செய்த மனுவில், ‘என் தாயார் ஜெயலலிதா; அவரது சகோதரி சைலஜாவிடம், என்னை தத்து கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு, வைஷ்ணவ அய்யங்கார் பிராமண சமூக வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்த, அனுமதிக்க வேண்டும்’ என, கூறியிருந்தார். ஜெயலலிதா மகள் என்பதை நிரூபிக்க, மரபணு சோதனை நடத்தவும் கோரியிருந்தார்.

இம்மனு, நீதிபதி வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, ஜெயலலிதாவின் சகோதரர் மகன், தீபக், மகள், தீபாவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, இவ்வழக்கில், தீபக் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தீபக் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அம்ருதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், பொய்கள் தான் உள்ளன. என் பாட்டி சந்தியாவுக்கு, ஜெயகுமார் என்ற மகனும், ஜெயலலிதா என்ற மகளும் தான் இருந்தனர். சந்தியாவின் உயிலில், அது தெளிவாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜெயலலிதாவின் சகோதரி சைலஜா என, அம்ருதா கூறியிருப்பது பொய்யானது. 1980ம் ஆண்டுகளில், நான்கு படங்களில், முன்னணி கதாபாத்திரங்களில், ஜெயலலிதா நடித்து வந்தார். தமிழ் இதழுக்கும், தொடர் கட்டுரை எழுதி வந்தார்.

சென்னையில் நடந்த, 27வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், அவர் பங்கேற்றதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அந்த கால கட்டத்தில், அதாவது, 1980 ஆகஸ்ட், 14ல், ஜெயலலிதா மகளாக அம்ருதா பிறந்தார் என்பது, முழு பொய்.

நான், 1980 ஆக., 27ல் பிறந்தேன்; போயஸ் தோட்டத்தில் வளர்ந்தேன். ஜெயலலிதாவுடன், என் தந்தை, தாயார், சகோதரி தீபா ஆகியோரும் வசித்து வந்தோம். அந்த கால கட்டத்தில், ஜெயலலிதா மகளாக பிறந்ததாக கூறுவது பொய்யானது.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, அம்ருதாவின் தாயாருக்கு எதிராக, தமிழக அரசு அவதுாறு வழக்கு தாக்கல் செய்தது. மனுதாரர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்களை, தகுந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்களை அபரிக்க நடந்த சதி திட்டமாக, இந்த கதை ஜோடிக்கப்பட்டுள்ளது.

அம்ருதாவுடன் தொடர்பில் இருக்க, ஜெயலலிதா விரும்பியிருந்தால், சைலஜாவுக்கு எதிராக, அவதுாறு வழக்கு தொடுத்திருக்க மாட்டார்.

சூழ்நிலைக்கு ஏற்ப தான், இறுதி சடங்குகள் மேற்கொள்ள முடியும். ஆளும் கட்சியின் தலைவராக இருந்து, ஜெயலலிதா இறந்துள்ளார். அவருக்கு, லட்சக்கணக்கில் தொண்டர்கள் உள்ளனர்.

போயஸ் தோட்டத்திலும், உடல் புதைக்கப்பட்ட இடத்திலும், வைஷ்ணவ அய்யங்கார் பிராமண சமூகத்தின் வழக்கப்படி, இறுதி சடங்குகளை நான் மேற்கொண்டேன். அப்போது, அமைச்சர்கள் இருந்தனர்.

ஜெயலலிதாவின் புகழை, கண்ணியத்தை சீர்குலைக்க, மனுதாரர்கள் விரும்புகின்றனர்.உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், பொய்யான மனுவை, மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.

மரபணு பரிசோதனை கோர, அவருக்கு உரிமை இல்லை. லலிதா, ரஞ்சனி ரவீந்திரநாதன் ஆகியோரின் குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

சுதந்திர தினத்தன்று விசேட போக்குவரத்து

Next Post

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியானது!

Next Post

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures