நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும், தனது குடும்பத்துக்கும் எதிராக அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு எதிரான மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
களுத்தறை இராணுவ ஒன்றிணைந்த அமைப்பினால் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.