Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவிலிருந்து அனுப்பிய டொலர் அடங்கிய பார்சலை விடுவிக்க சுங்க அதிகாரி போன்று நடித்த பெண்ணிடம் 95 ஆயிரம் ரூபாவை இழந்த மட்டக்களப்பு பெண்

August 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமெரிக்காவிலிருந்து அனுப்பிய டொலர் அடங்கிய பார்சலை விடுவிக்க சுங்க அதிகாரி போன்று நடித்த பெண்ணிடம் 95 ஆயிரம் ரூபாவை இழந்த மட்டக்களப்பு பெண்

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைக்கடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்த மோடிக்கும்பலிடம் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை பறிகொடுத்து ஏமாந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளைகாரர் பெண் ஒருவர் மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெண் ஒருவருடன் வட்ஸ் ஆப் மூலம் நட்பு ஏற்பட்டு இருவரும் நீண்ட காலமாக நட்புறவாடி வந்துள்ள நிலையில் உங்களுக்கு பெரும் பணம் தங்க ஆபரணங்கள் வெகு விரைவில் கிடைக்கும் தான் பெரிய பணக்காரர் என பெண்ணிடம் அமெரிக்க நண்பி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசியின் இலக்கத்தில் இருந்து வட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் விமான நிலைய சுங்க திணைக்களத்தில் கடமையாற்றி வருதாகவும் உங்கள் பெயர், விலாசத்திற்கு அமெரிக்காவில் உள்ள உங்கள் வெள்ளைக்கார நண்பி பாசல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த பாசலில் 70 ஆயிரம் டொலர் தங்க ஆபரணங்கள், கைக்கடிகாரம் இருப்பதாகவும் டொலரை பாசலில் அனுப்ப முடியாது. இது சட்டவிரோதமானது எனவே இந்த பார்சலை சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்க 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அனுப்புமாறும் பார்சலில் உள்ள 70 ஆயிரம் கொண்ட டொலரை வீடியோ எடுத்து வட்ஸ் ஆப்பில் அனுப்பி பணத்தை வங்கி ஊடாக அவசரமாக அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வட்டஸ் ஆப்பில் அனுப்பிய வீடியோவை நம்பி உடனடியாக மோசடி கும்பல் அனுப்பிய வங்கிக் கணக்கில் 95 ஆயிரம் ரூபாவை அனுப்பிய பின்னர் சுங்கத் திணைக்களத்தில் வேலை செய்வதாக நடித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து தான் ஏமாற்றுப் பேர்வழியால் 95 ஆயிரம் ரூபா பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளதை மட்டக்களப்பு பெண் உணர்ந்து கொண்டுள்ளார்.

இதேவேளை அண்மைக் காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளது. இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என ஒரு இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் ரூபா வரை இவ்வாறான மோசடி கும்பலுக்கு பலர் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர் எனவே இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous Post

காணாமல்போன இளைஞரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவி கோரல்

Next Post

நுவரெலியாவில் கணவன் – மனைவி மரணம் | கொலையா ? தற்கொலையா ? – புலன் விசாரணைகள் ஆரம்பம்

Next Post
நுவரெலியாவில் கணவன் – மனைவி மரணம் | கொலையா ? தற்கொலையா ? – புலன் விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியாவில் கணவன் - மனைவி மரணம் | கொலையா ? தற்கொலையா ? - புலன் விசாரணைகள் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures