கடந்த பிப்., 14ல், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா என்ற இடத்தில், சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர், பாக்., தீவிரவாதிகள். இதில், 44 சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் இறந்து போயினர். இதற்கு இந்திய ராணுவம், பிப்., 26ல் பதிலடி கொடுத்தது. இந்திய எல்லைக் கடந்து, பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் தீவிரவாத முகாம் மீது குண்டு மழைப் பொழிந்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அடுத்த நாளே, காஷ்மீர் எல்லைக்குள் பாக்., விமானங்கள் புகுந்தன. அதை, இந்திய விமானப் படை வீரர்கள் விரட்டி அடித்தனர். அப்போது மிக் ரக விமானத்தில் சென்ற விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமான், பாக்., ராணுவத்திடம் சிக்கி, , பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டு வந்தார்.
கடந்த சில நாட்களாக இப்படி உணர்ச்சிப்பூர்வமாக நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அப்படியே படமாக்கினால், அந்தப் படம் ஓடும் என முடிவெடுத்திருக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்கள், அதை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். இதற்காக, பெயர் தேர்வு செய்யப்பட்டு, பதிவும் செய்யப்பட்டு வருகிறது. இதை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளனர்.