கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது அத்தியாவசிய தேவையின் பொருட்டு கிளிநொச்சி நகருக்கு சென்றுவர அனுமதி அளிக்கப்ப்ட்டுள்ளது.
பளை பிரதேசம் நிர்வாக ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமாக யாழ் மாவட்ட கட்டளை தளபதியின் கீழும் காணப்படுகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது பளை மக்கள் தங்களது நிர்வாக மாவட்டத்தின் நகரான கிளிநொச்சிக்கு சென்றுவர ஆனையிறவு சோதனை நிலையத்தில் உள்ள யாழ் மாவட்ட இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.
இதனையடுத்து பளை மக்கள வெளியேற முடியாத நிலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கனவத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து யாழ் மற்றும் கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதிகளுடன் உரையாடியதற்கு அமைவாக அவர்களுக்கு கிளிநொச்சி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிர்வாக குழறுபடியால் மாவட்டச் செயலகம், மாவட்ட வைத்தியசாலை, நீதிமன்றம், மற்றும் நகரில் உள்ள தங்களின் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு என பளை மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் யாழ் மற்றும் கிளிநொச்சி படைகளின் தளபதிகள் இருவருடன் பேசியதற்கு அமைவாக பளை பிரதேச மக்கள் தங்களின் அடையாள அட்டையுடன் ஆதாவது அடையாள அட்டையில் பளை என குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அதனை காண்பித்தும், பளையில் நிரந்தரமாக வசித்தும் அடையாள அட்டையில் பிரிதொரு இடம் குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் கிராம அலுவலரின் கடிதத்துடனும் கிளிநொச்சி நகருக்கு சென்று வர முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்