நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடர்வதால் பொது மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாத இறுதி வரை நீடிக்கும் எனவும், வெப்பநிலை 32 பாகை முதல் 41பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் உள்ள போது பொது மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.