Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விளையாட்டு அமைதியான போட்டியால் உலகை ஒன்றிணைக்க வேண்டும் | சர்வதேச ஒலிம்பிக் குழு

September 22, 2025
in News, Sports, முக்கிய செய்திகள்
0
விளையாட்டு அமைதியான போட்டியால் உலகை ஒன்றிணைக்க வேண்டும் | சர்வதேச ஒலிம்பிக் குழு

மோதல் மற்றும் பிரிவினையால் உலுக்கிக்கொண்டிருக்கும் உலகில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக விளையாட்டுத்துறை இருக்கவேண்டும் என்பதில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபை உறுதியாக இருக்கிறது.

மேலும், அமைதியான போட்டி சூழலில் விளையாட்டுத்துறை  உலகை  ஒன்றிணைக்க வேண்டும்   என நிறைவேற்றுச் சபை மீண்டும்  வலியுறுத்துகிறது.

இது ஒலிம்பிக் இயக்கத்தின் மையத்தில் இருப்பதுடன் ஒலிம்பிக்கின் அடிப்படைக் கொள்கையிலிருந்து ஊற்றெடுக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக இவ்வுலகில் பாவம் அறியாத இலட்சக் கணக்கான மக்களைப் பாதிக்கும் பல யுத்தங்களும் மோதல்களும் இடம்பெறுகின்றன. போரினால் பாதிக்கப்படுவோர் எண்ணற்றவர்கள்.

நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் வன்முறை மூலம் அல்ல பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும் என்பதில் சர்வதேச ஒலிம்பிக் குழு ஆழமான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் போட்டிகள் சீர்குலைக்கப்படுவது, போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகளினால் வீரர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, அரசியல் பதற்றங்கள் காரணமாக போட்டிகளைப் புறக்கணித்தல் மற்றும் போட்டிகள் இரத்துச் செய்யப்படுதல் போன்றவை குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு மிகுந்த கவலை கொண்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் வீரர்கள் அமைதியாக பங்குபற்றும் உரிமையைப் பறிப்பதுடன் விளையாட்டுத்துறையின் பலத்தை ஒலிம்பிக் இயக்கம் எடுத்துக்காட்டுவதையும் தடுக்கிறது.

சமூகக் கட்டமைப்பிற்குள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவேண்டும் என்பதையும் ஒலிம்பிக் இயக்கத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுத்துறை ஸ்தாபனங்கள் அரசியல் நடுநிலைமையைப் பேணவேண்டும் என்பதையும் ஒலிம்பிக் சாசனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் விளையாட்டுத்துறையின் சுயாட்சி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நடுநிலைமையை ஐக்கிய நாடுகள் சபை தனது பொதுச்சபை தீர்மானங்கள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தீர்மானங்கள் வெறும் குறியீடுகள் அல்ல, மாறாக உலகின் பிளவுகளிலிருந்து விளையாட்டுத்துறையின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான அறைகூவலாகும்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஒன்றிணைக்கும் திறன் மறுக்க முடியாத வகையில் நிரூபிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அகதி ஒலிம்பிக் அணியினர் ஒலிம்பிக் கிராமத்தில் இணக்கப்பாட்டுடன் வாழ்ந்ததுடன் விளையாட்டு அரங்கில் அமைதியாக  போட்டியிட்டனர்.

இதே உணர்வுடன் டக்கார் 2026 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஒவ்வொரு தேசிய ஒலிம்பிக் குழுவும் தங்களது விளையாட்டு வீரர்களுடன் பங்கேற்பதற்கு தேவையான ஒரு சிறந்த மார்க்கத்தை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபை உறுதிபூண்டுள்ளது.

இதன் நிமித்தம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் எதிர்காலத்திற்கு பொருத்தமான செயன்முறையை நிறைவேற்றும் வகையில் ஒலிம்பிக்கின் அடிப்படைக் கொள்கைகளை பாதுகாப்பதற்கான செயற் குழு ஒன்றை அமைக்க சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது.

இது சர்வதேச ஒலிம்பிக் குழு, ஒலிம்பிக் விளையாட்டு விழா, விளையாட்டுத்துறை ஆகியன அரசியல் நடுநிலைமையும் அமைதியான போட்டியில் உலகை ஒன்றிணைப்பதையும் உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஒலிம்பிக் அடிப்டைக் கொள்கைகளுக்கு அமைய ஒலிம்பிக் பெறுமதிகளை எடுத்துக்காட்டுவதிலும் சமாதான தூதர்களுக்கான பங்கை வகிப்பதிலும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நம்பமுடியாத வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்பது உறுதி.

Previous Post

தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான தகவல்!

Next Post

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் முன்னோட்டம்

Next Post
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா : சாப்டர் 1' படத்தின் முன்னோட்டம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026

Recent News

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures