Wednesday, March 29, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராம்குமார் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன.. வழக்கறிஞர் பகீர் தகவல்

July 8, 2016
in News, World
0
ராம்குமார் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன.. வழக்கறிஞர் பகீர் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ராம்குமார் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன.. வழக்கறிஞர் பகீர் தகவல்

சுவாதி கொலை வழக்கில் பொலிசார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது என வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடந்த 24-ம் திகதி காலையில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை கடந்த 1ந் திகதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்வதற்காக பொலிசார் சென்றபொழுது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராம்குமார் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சென்னை கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார். இந்நிலையில் புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்து பேசியுள்ளார் வழக்கறிஞர் ராமராஜ்.

சந்திப்புக்கு பின்னர் அவர் அளித்துள்ள பேட்டியில், சுவாதி படுகொலை வழக்கில் பொலிசார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொரு விஷயங்களாக வெளிவருகிறது என்றார்.

ராம்குமாரை பொலிசார் நள்ளிரவில் கைது செய்யவில்லை. முதல்நாளே கைது செய்துவிட்டனர். வெளியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு அவருடைய கழுத்தை அரை வட்ட வடிவில் அறுத்துள்ளனர். தாடைப் பகுதியில் அறுத்தால், சரியாக பேச முடியாது என்பதால் அவ்வாறு செய்துள்ளனர்.

பிறகு, ரத்தம் வடிய மயங்கிய நிலையில் ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர். அந்தப் பகுதியில் மின்தடையை ஏற்படுத்திவிட்டு, ராம்குமார் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். வெளியில் எழுந்து வந்த அவரது தந்தை பரமசிவத்திடம், இது உன் பையனா கழுத்தை அறுத்துக்கிட்டான்’ எனக் கூறியுள்ளனர்.

அங்கு வைத்து ராம்குமாரைக் கொல்லாமல் விட்டதற்குக் காரணம், மீனாட்சிபுரம் கிராம மக்களின் ஒற்றுமைதான். ஊருக்குள் வைத்துக் கொன்றுவிட்டால், மக்கள் எளிதில் நம்மை விட்டுவிட மாட்டார்கள் என உள்ளூர் காவலர்கள் கூறியதால், அமைதியாக இருந்துவிட்டனர்.

ஊடகங்களிடம், சுவாதி வழக்கில் கைது செய்து விடுவார்களோ எனப் பயந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தான்’ எனப் பரப்பிவிட்டனர். குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிட்டு ராம்குமாரை உளவியல் ரீதியான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போதோ அல்லது திரும்பி வரும்போதோ வழியில், ஏதாவது செய்து விடுவார்கள் என மிகுந்த பயத்தில் அவர் இருக்கிறார்.

அவருக்கு எது நடந்தாலும் பொலிசார்தான் முழுப் பொறுப்பு. நெல்லையில் அவர் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலம், அவருடையது அல்ல. இந்த வழக்கின் முக்கியமான உண்மைகள் விரைவில் வெளிவரும் என்றார்.

சுவாதி வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் தரப்பில், நாங்கள் கைது செய்யச் சென்றபோது பயந்து போய், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தது உண்மை. வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், இவ்வாறு சொல்வது காலம்காலமாக நடந்து வருகிறது. இதற்கு மேலும், அவர்களின் புகார் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

2018ல் வடக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இராணுவமயத்திலிருந்து விடுபடும்! மங்கள

Next Post

சாலையில் பச்சை விளக்கு எரிந்தும் வாகனத்தை எடுக்காத ஓட்டுனர்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

Next Post
சாலையில் பச்சை விளக்கு எரிந்தும் வாகனத்தை எடுக்காத ஓட்டுனர்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

சாலையில் பச்சை விளக்கு எரிந்தும் வாகனத்தை எடுக்காத ஓட்டுனர்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

March 29, 2023
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

March 29, 2023
பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

March 29, 2023
DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

March 29, 2023

Recent News

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

March 29, 2023
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

March 29, 2023
பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

March 29, 2023
DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

March 29, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures