கனடா நாட்டில் மது போதையில் தாயாரை சரமாரியாக குத்திக் கொன்ற 16 வயது மகன்…

கனடா நாட்டில் மது போதையில் தாயாரை சரமாரியாக குத்திக் கொன்ற 16 வயது மகன்…

கனடா நாட்டில் மது போதையில் தாயாரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த 16 வயது மகனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கல்கேரி நகரில் உள்ள Forest Lawn என்ற பகுதியில் பெயர் வெளியிடப்படாத 16 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான்.

சிறுவனின் தந்தைக்கு 33 வயதான பெண்ணுடன் இரண்டாவது திருமணம் முடிந்து அவரும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11 மணியளவில் சிறுவனின் வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.

அப்போது, சிறுவனுக்கும் தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறுவன் அந்த நேரத்தில் மது போதையில் இருந்துள்ளான்.

வாக்குவாதம் தகராறில் முடிந்ததும் சமையல் அறையிலிருந்து கத்தியை எடுத்து வந்த சிறுவன் தாயாரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான புகார் உடனடியாக பொலிசாருக்கு தெரியவர அவர்கள் தாயாரை அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இருவர் மீது எந்த குற்றமும் இல்லாததால் அவர்களை விடுதலை செய்தனர்.

16 வயது சிறுவன் இந்த கொலையை செய்துள்ளதாக அவன் அளித்த முரணான வாக்குமூலத்தில் தெரியவந்ததை தொடர்ந்து, சிறுவன் மீது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறுவன் மைனர் என்பதால் கனடா நாட்டு சட்டப்படி சிறுவன் தொடர்பான எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News