ஆயுதம் காட்டி கொள்ளையிட முயன்ற நபர்: அடுத்து நிகழ்ந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்
அர்ஜென்டினாவில் கட்டுமானத்தொழில் செய்யும் நிர்வாகி ஒருவரிடம் இருந்து பெருந்தொகையை ஆயுதம் காட்டி கொள்ளையிட முயன்ற உள்ளூர் கொள்ளையன் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளான்.
அர்ஜென்டினா தலைநகர் Buenos Aires அருகே குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது விலை உயர்ந்த வாகனம் ஒன்றில் கட்டுமானத்தொழில் செய்யும் நிர்வாகியான பெத்ரோ கொன்ஸாலஸ் பெருந்தொகையுடன் தொழில் வகை சந்திப்பில் கலந்துகொள்லும் பொருட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அப்பகுதிக்கு வந்த 40 வயதாகும் உள்ளூர் திருடன் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை காட்டி அந்த பணத்தை கொள்ளையிடும் நோக்கில் மிரட்டியுள்ளான்.
ஆனால் மிரட்டலுக்கு சற்றும் பயப்படாத கொன்ஸாலஸ் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் குறித்த கொள்ளையனை சுட்டு வீழ்த்தியுள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த நிகழ்வினை அடுத்து அந்த கட்டுமான நிர்வாகி உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே துப்பாக்கி குண்டு பாய்ந்த கொள்ளையனை பார்வையாளர்கள் சிலர் மீட்டெடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பாக நடிபெற்ற விசாரணையின் முடிவில், கொன்ஸாலஸ் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும், தம்மிடம் இருந்த பணத்தை பாதுகாக்கும் பொருட்டு தற்காப்பு நடவடிக்கையாக மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து 62 வயதான கொன்ஸாலஸ் விடுதலை செய்யப்பட்டார்.