வவுனியாவில் நிலவும் கடும் வெப்பத்தையடுத்து, சுதந்திர இளைஞர்கள் ஏற்பாட்டில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நுங்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இயற்கை பானமாகக் கருதப்படும் நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியையும் சுறுசுறுப்பையும் அளிப்பதால், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் அதனை விரும்பி அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், நுங்கு உள்ளிட்ட இயற்கை உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகின்றது.
இந்நிகழ்வில் வவுனியா இளைஞர்கள், கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொலிஸார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




