அட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.
டிக்கோயா தரவளை பொது மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில், உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்கள் கலந்துகொண்டனர்.
கடந்த வியாழக்கிழமை (21) வர்த்தக நிலைய குடியிருப்பில் இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், எஸ். காளிமுத்து சத்திவேல் (85) மற்றும் அவரது மனைவி சகுந்தலாதேவி (82) ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





