ரக்ஷாபந்தன் பண்டிகைக்கு சகோதரி ஒருவர் தனது தம்பிக்கு, சிறுநீரகத்தை தானமாக கொடுத்து அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது.
உத்தரபிரேதச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் பரிசாக தனது தம்பிக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கி சகோதரி ஒருவர் தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரக்ஷா பந்தன் என்பது, ஆடி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.