கதிராமங்கலம் போராட்டத்தின்போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயராமன் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் அளித்து உயர்நீதிமன்ற மதுரை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் ஜெயராமன் மீதான 2-வது வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயராமனை தவிர மற்ற 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.