Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மாவீரன்- விமர்சனம்

July 16, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
மாவீரன்- விமர்சனம்

தயாரிப்பு: சாந்தி டாக்கிஸ்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு, சுனில், மிஷ்கின் மற்றும் பலர்.

இயக்கம்: மடோன் அஸ்வின்

மதிப்பீடு: 3/5

‘மண்டேலா’ என்ற படத்தின் மூலம் வாக்காளனின் வலிமையை பார்வையாளனுக்கு ஜனரஞ்சகமாக விவரித்த இயக்குநர் மடோன் அஸ்வின், இந்த திரைப்படத்தில் கட்டாயத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்படும் பூர்வ குடி மக்களின் இடபெயர்வும், அதன் பின்னணியில் உள்ள தகிடுதத்தங்களையும் ‘மாவீரன்’ என்ற பெயரில் ஃபேண்டஸி ஜேனரில் சொல்லி இருக்கிறார். இது ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.

சென்னை கூவம் நதிக்கரையின் பின்னணியில் அதன் கரையோரம் குறைவான வசதிகளுடன் கதையின் நாயகனான சத்யா எனும் சிவகார்த்திகேயன் தனது தாய் சரிதா மற்றும் தனது தங்கையுடன் வசித்து வருகிறார். இவர் பிரபலமான முன்னணி நாளிதழ் ஒன்றில் காமிக்ஸ் கதையை எழுதி, வரையும் பணியினை செய்கிறார். அடிப்படையில் பயந்த சுபாவமும், கோழையுமான சத்யா, ‘மாவீரன்’ என்ற காமிக்ஸ் கதையை வரைந்து எழுதத் தொடங்குகிறார். இந்நிலையில் இந்த கரையோரம் வசிக்கும் ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களை அரசு, ‘மக்கள் மாளிகை’ என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் இடம்பெயர சொல்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் தரமற்றதாக இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாயம் இருக்கிறது. இங்கு மக்கள் வாழ வேண்டும் என அரசு மற்றும் அரசியல் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதி தரமற்றதாக இருப்பதால் பல்வேறு குறைபாடுகள் நாளாந்தம் ஏற்படுகிறது. இதனால் அங்கு மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். சத்யா அந்த குடியிருப்பில் குறைபாடுகளுடன் சமரசம் செய்து கொண்டு வாழ்கிறார். தன் குடும்ப உறுப்பினர்களையும் சமரசத்துடன் வாழுமாறு கேட்டுக்கொள்கிறார். இந்நிலையில் குடியிருப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி சத்யாவின் தங்கையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர் கொள்ள தயாராக இல்லாத சத்யா மீது அவரது தாயார் தவறான அபிப்பிராயத்தை கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். இதன் போது அவருக்கு அற்புதமான குரலொலி சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை வைத்துக்கொண்டு அவர் தரமற்ற கட்டுமானத்தில் குடியிருக்கும் மக்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

வழக்கமாக கலகலப்பாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இந்த திரைப்படத்தில் காமிக்ஸ் கலைஞராக நடித்து கவர்கிறார். இவருக்கு பிரத்யேகமாக கிடைக்கும் குரலொலி சக்திக்கு இவர் எதிர்வினையாற்றி நடித்திருக்கும் நடிப்பு- ரசிகர்களை வசீகரிக்கிறது. நகைச்சுவை, நடனம், எக்சன், சென்டிமென்ட் என அனைத்து தளங்களிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ அவருடைய திரையுலக பயணத்தில் முக்கியமான இடத்தை பெறும். இவரைத் தொடர்ந்து வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கினின் நடிப்பு.. குறிப்பாக கண்களாலேயே நடித்து இருக்கும் நடிப்பு சபாஷ். படத்தின் முதல் பாதி முழுவதும் யோகி பாபுவின் நகைச்சுவையால் அதகளமாகிறது. நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் கதாநாயகனுக்கு சில இடங்களில் உதவினாலும்.. வழக்கமான சினிமா கதாநாயகியாகத்தான் வருகிறார். சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா- சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்திருந்தாலும் தன் அனுபவத்தை திரையில் முத்திரையாக பதிக்கிறார்.

படத்தில் பாராட்டக்கூடிய அம்சம்.. இந்த திரைப்படம் இயல்பான நிலையிலிருந்து பேண்டஸி எக்சன் ஜேனருக்கு மாறும்போது.. அதற்காக இயக்குநர் பயன்படுத்தி இருக்கும் உத்தி.. புத்திசாலித்தனமாகவும், புதுமையாகவும் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இதற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரல் வலு சேர்த்திருக்கிறது.

சத்யா எனும் நாயகனின் கதாபாத்திரம் கோழையாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அவர் தனக்கு கிடைத்திருக்கும் பிரத்தியேக சக்தியை பற்றி இறுதிவரை புரிந்து கொள்ளாமல் இருப்பது திரைக்கதையின் பலவீனமாகவே கருதப்படுகிறது.

மக்கள் பிரச்சினையை தீர்ப்பவன் தான் மாவீரன் என்று சொல்ல வரும் இயக்குநர்.. அதனை அழுத்தமாக சொல்லவில்லையோ…! என்ற எண்ணமும் பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது.

படத்திற்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மக்கள் செல்வனின் குரல், பின்னணி இசை, கிறாபிக்ஸ்.. என அனைத்து தொழில்நுட்பங்களும் கை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்பட வைக்கிறது.

மாவீரன்- வீரமே ஜெயம்.

Previous Post

கொழும்பு – யாழ் புகையிரத திட்டத்தின் அடுத்த கட்டம் ஜனவரியில் ஆரம்பமாகும்

Next Post

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்! மொட்டுக் கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வு

Next Post
நாமலுடன் ரணில் ஏற்படுத்திய இணக்கப்பாடு

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்! மொட்டுக் கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures