Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற சண்டை – விசாரணைக்குழுவில் மாவை சேனாதிராஜா

January 23, 2019
in News, Politics, World
0

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (22) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்‌ஷ, மாவை சேனாதிராஜா,சந்ரசிறி கஜதீர,பிமல் ரத்னாயக்க ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் ஐ.ம.சு.மு எம்.பிக்கள் இருவர் தவிர ஏனையோர் பங்கேற்றதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் இதன் போது அறிவித்துள்ளார்.

தொடர்புபட்ட எம்.பிக்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இந்த அறிக்கையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சுமார் 40 பேரின் பெயர்கள் அடங்குவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் நவம்பர் 14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்பநிலை தொடர்பாக இந்தக் குழு முழுமையாக ஆராய்ந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட பலரிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளது. பாராளுமன்ற ஒளிப்பதிவுகள் மற்றும் ஊடகங்களின் நெறிப்படுத்தப்படாத ஒளிப்படக்காட்சிகள் என்பனவும் ஆராயப் பட்டதாக குழு உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்: பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்திய எம்.பிக்களுக்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது தொடர்பாகவும் இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். குற்றவியல் சட்டத்தின் கீழ் எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தினுள் தவறு நடந்தால் அது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது குறித்தும் சபாநாயகரே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

ஓகஸ்ட் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கூடிய போது சபை நடுவில் திரண்டு ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் மோதலில் ஈடுபட்டதுடன், எம்.பிக்கள் மீது மிளகாய்த்தூள் தாக்குதலும் நடத்தப்பட்டன.இதன் போது சில எம்.பிக்கள் காயமடைந்ததோடு பாராளுமன்ற உடைமைகளும் சேதமாக்கப்பட்டன.

Previous Post

உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் துப்பாக்கியை தூக்குவேன்

Next Post

படைப்புளுக்களுக்கு தீர்வாக பூச்சிக்கொல்லி முறையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Next Post

படைப்புளுக்களுக்கு தீர்வாக பூச்சிக்கொல்லி முறையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026

Recent News

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures