இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த பெரும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கலின் போது, 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றையதினம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அச் சபையின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.













