Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை சவப்பெட்டிக்குள் தள்ளி இறுதி ஆணியை அடிக்க அரசாங்கம் தயாராகிறது | சஜித் கடும் சாடல்

January 2, 2022
in News, Sri Lanka News
0
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

நாட்டின் அனைத்து முக்கிய துறைகளையும் நிர்வகிப்பதில் முழுமையாகத் தோல்வியடைந்திருக்கும் தற்போதைய அரசாங்கம், ஒட்டுமொத்த நாட்டையும் சவப்பெட்டிக்குள் தள்ளி அதன்மீது கடைசி ஆணியை அடிப்பதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றது.

மறுபுறம் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டையும் மக்களையும் மயானத்தை நோக்கி அழைத்துச்செல்வதற்கான பாதையைத் துரிதமாகத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

திஸ்ஸமஹராமவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான மனிதாபிமான சுற்றுலாவில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கம் எதில் வெற்றியடைந்திருக்கின்றது? அடுப்பு எரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற விறகு இப்போது பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றது.

நாளாந்தம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றன. திரவ உரம் வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களும் வெடிக்கின்றன. முதல்நாள் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்கள் மறுநாளே இரத்துச்செய்யப்படுகின்றன.

இரவிரவாக பெருந்தொகைப் பணம் புதிதாக அச்சடிக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் ஒட்டுமொத் நாட்டையும் சவப்பெட்டிக்குள் தள்ளி, அதன்மீது கடைசி ஆணியை அடித்துக்கொண்டிருக்கின்றது.

நாட்டையும் மக்களையும் மயானத்தை நோக்கி அழைத்துச்செல்வதற்கான பாதையை அஜித் நிவாட் கப்ரால் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார்.

நாம் நேசிக்கின்ற இந்த நாடு தற்போதைய அரசாங்கத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தை விடவும் கிராமங்களிலுள்ள மரண உதவி சங்கங்கள் பன்மடங்கு சிறந்தவையாகும். நாடெங்களிலும் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள்.

அவ்வாறு காத்திருக்கும்போது அவ்வீதியினூடாகப் பயணிக்கின்ற ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர்களை நோக்கி மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலையுருவாகியுள்ளது.

நாட்டை ஆள்பவர்கள் அல்லது மக்களின் கருத்துக்களைக் கேட்டறியவேண்டிய பொறுப்பிலிருப்பவர்கள், அவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் செவிமடுக்கவேண்டியது அவசியமாகும். ஆனால் தற்போதைய அரசாங்கம் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய இடத்தில் அமைந்திருந்த வர்த்தக நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

எப்போதும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டும், அதிசொகுசு வாகனங்களில் பயணித்துக்கொண்டும் தீர்மானங்களை மேற்கொள்ளாமல் வீதிகளில் இறங்கி, பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டறியுமாறு ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துகின்றோம்.

அதனூடாக மாத்திரமே சாதாரண மக்கள் தற்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் விளங்கிக்கொள்ளமுடியும்.

அதேவேளை அரசாங்கம் உதவிகளைக் கோரியிருக்கக்கூடிய சர்வதேச நாடுகளின் பிரதானிகளும் சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களின் உயரதிகாரிகளும் அதுபற்றிய எமது அபிப்பிராயத்தைக் கேட்டார்கள்.

அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு உடனடியாக உதவுமாறு நாம் வலியுறுத்தினோம். நாட்டுமக்களின் நலனை உறுதிசெய்வதுடன் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பது மாத்திரமே எமது ஒரேயொரு இலக்காகும் என்று குறிப்பிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

திங்கள் வட்டம் பற்றித் தெரியுமா? | வெற்றிநடைபோடும் திங்கள் நட்பு வட்டம்

Previous Post

”சித் ஸ்ரீராம் கர்ணன் பாடலை அழகாகப் பாடியிருக்கிறார்”| பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேட்டி

Next Post

வட்டிவீதங்கள் தற்போது மிகவும் எதிர்மறையான மட்டத்தில் காணப்படுகின்றது | ஹர்ஷ டி சில்வா

Next Post
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக ஹர்ஷத சில்வா

வட்டிவீதங்கள் தற்போது மிகவும் எதிர்மறையான மட்டத்தில் காணப்படுகின்றது | ஹர்ஷ டி சில்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures