கடந்த ஆண்டில் எந்த வெற்றி படத்தையும் வழங்காத நடிகர் அஸ்வின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பீட்சா 3’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘பீட்சா 3 -தி மம்மி’. இதில் அஸ்வின், பவித்ரா மாரிமுத்து, அபி நட்சத்திரா, குரைஸி, காளி வெங்கட், அனுபமா குமார், கௌரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அர்ஜுன் ராஜ் இசையமைத்திருக்கிறார். மிஸ்டரி திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சி. வி. குமார் தயாரித்திருக்கிறார்.
திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் ‘பீட்சா 3- தி மம்மி’ திரைப்படம், எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.
‘பீட்சா’ திரைப்படத்தின் முதல் பாகம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது. ‘பீட்சா 2’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து பீட்சா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகவிருக்கிறது. ‘பீட்சா 3- தி மம்மி’ என பெயரிடப்பட்டிருப்பதால், திரில்லர் ஜேனரில் வெளியாகும் படங்களுக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்த திரைப்படம் இடம் பிடித்திருக்கிறது.