Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துணை ராணுவ முகாமை தாக்க பயங்கரவாதிகள் முயற்சி!!

February 13, 2018
in News, Politics, World
0
துணை ராணுவ முகாமை தாக்க பயங்கரவாதிகள் முயற்சி!!

காஷ்மீரின் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். பின்னர் ராணுவத்துடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஸ்ரீநர் அருகே உள்ள கரன் நகர் பகுதியில் அமைந்துள்ள, துணை ராணுவப்பிரிவான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாமுக்குள் நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் நுழைய முயன்றனர். பயங்கர ஆயுதங்களுடன் முகாம் அருகே வந்த அந்த 2 பயங்கரவாதிகளை காவலாளி கண்டுபிடித்தார்.

உடனே அவர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் பயங்கரவாதிகள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை சி.ஆர்.பி.எப். வீரர்கள் துரத்திச்சென்றனர். எனவே அந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டுக்குள் சென்று பதுங்கினர்.

இதைத்தொடர்ந்து ராணுவ கமாண்டோ படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இணைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டுக்குள் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளை நோக்கி தாக்குதலை தொடுத்தனர்.

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் முஜாகித் கான் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீட்டுக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கு விட்டுவிட்டு துப்பாக்கிச்சத்தம் கேட்டு வருவதாக கடைசியாக வந்த தகவல்கள் தெரிவித்தன.

இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் மீது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை வீரர்கள் விரட்டியடித்தனார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சி.ஆர்.பி.எப். முகாமுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இந்த முகாமுக்கு அருகே அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில்தான் கடந்த 7-ந் தேதி போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி நவீத் ஜாட்டை சிலர் மீட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாக்.குடன் பேசுவதே அவசியமானது

Next Post

டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு

Next Post

டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures