பிரான்சின் ஜேர்மனி எல்லை நகரமான Saint-Avold (Moselle) இல் ஒரு வீட்டில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த பாரி ஆயுதக் களஞ்சியம், சுங்கப் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கி முதல் M16 கனரக ஆயுதங்கள் வரை, நாற்பதுகளின் வயதுகளில் உள்ள இந்த நபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
தாக்குதல் செய்யக் கூடிய நிலையில் உள்ள MK2 கைக்குண்டுகள் சொக்கலேட் தூள் பெட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது.
அத்துடன் மேற்கூறிய ஆயுதங்களிற்கான 38.000 குண்டுகள், ஒரு வெப்பமாக்கியின் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்துள்ளது.
உலகம் அழியும் நிலையில் உள்ளதாகவும், அதற்காகவே இதனைச் சேகரித்ததாகவும், விநோதமான வாக்குமூலம் கொடுத்தள்ள இந்த நபர், கைது செய்யப்பட்டு, ஜோந்தார்மினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.