சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதனை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்கிசை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்ற பிரிவு பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகத்தபாலவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தி வெளியாகியதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பதற்றமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்ற விசாரணை அதிகாரிகளினால் அதிகாரினால் அடுத்ததாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த ஆகிய மூவரும் கைது செய்யப்படவுள்ளனர்.
தற்போது கல்கிசை நீதிமன்றத்தினால் அவர்களுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிடம் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு பாதுகாப்பு கடமைகளில் அவரே ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளிடம் குற்ற விசாரணை பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆயத்தமாகியமையினால் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது எழிய அமைப்பு குழப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.