இலங்கையின் 70வது சுதந்திரதினம் இன்று கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அனைத்து திணைக்களங்களும் இணைந்து குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணியளவில் குறி்த நிகழ்வு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கதாகும். நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், திணைக்களம் சார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.