கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள மச்னா கிராமவாசிகளின் முயற்சிகளை இந்திய இராணுவம் பாராட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அவசர தேவை நிமித்தம் தரையிறங்கிய இராணுவ ஹெலிகொப்டரின் விமானக் குழுவினருக்கு உதவிகளை வழங்கியதற்காக இந்திய இராணுவம் நன்றி தெரிவித்துள்ளது.
மாருவா ஆற்றின் கரையில் முன்னெச்சரிக்கையாக தரையிறங்கிய விமானக் குழுவினருக்கு சரியான நேரத்தில் உதவி செய்ததற்காக மச்னா – சூகிஷ்த்வார் கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இராணுவ ஹெலிகொப்டரில் இருந்த மூன்று உறுப்பினர்களில் ஒரு விமான தொழில்நுட்ப வல்லுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறுபுறம், இந்திய இராணுவம் அதன் ஏஎல்எச் துருவ் ஹெலிகொப்டர்களை தரையிறக்கியது.
கடந்த இரண்டு மாதங்களில் ஹெலிகொப்டர் கடற்படை சோதனைக்காக தரையிறக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
மார்ச் மாதம் மும்பையில் கடற்படை ஹெலிகொப்டர் பணிகளைச் செய்துவிட்டு வெளியேறியபோது முதல் விபத்து ஏற்பட்டது.
ஏப்ரலில் கொச்சியில் கடலோரக் காவல்படையின் ஹெலிகொப்டர் சோதனையின் போது தரையிறங்கியபோது மற்றொரு விபத்து ஏற்பட்டது.
மே 4-ம் திகதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏஎல்எச் துருவ் ஹெலிகொப்டர்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.