திருவல்லிகேணி காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து தனியார் விடுதிகளில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மயிலாப்பூரைச் சேர்ந்த விக்ரம் என்ற ரவுடியிடம் கள்ளத்துப்பாக்கி இருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இது போன்ற கள்ளத்துப்பாக்கிகளின் வரத்தும் அதிகரித்து வருகிறது.