ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் முடியும் வரையில் சட்டம் ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணப்படும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக தனது பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களம் நிருவகிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.