கடந்த 30 ஆம் திகதி வவுணதீவு பொலீஸ் பிரவிற்குட்பட்ட வலையறவு பாலத்திற்கு அருகாமையில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபராக உள்ள அஜந்தன் அவரது விடுதலையை வலியுறுத்தி கடந்த 17 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தின்ப பின்னர் மட்டக்களப்பு பொலீஸாரின் தலையீட்டின் பேரில் ஐந்து பிள்ளைகள் உட்பட அஜந்தனின் குடும்பத்தாரும் பொலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அவர்களது வீட்டிற்கு அனுப்பு வைக்கப்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பான ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்விரு தெரிவித்திருந்தார் இது தொடர்பாக மேலும் கூறுகையில் எனது கணவர் எந்த குற்றமும் செய்யாதவர் நடைபெற்ற குற்றத்திற்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை இவரது விடுதலை குறித்து நாம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிருத்திருந்தோம் .அந்தவகையில் நான் முன்னெடுத்திருந்த போராட்டம் சாகும் வரையிலான போராட்டமாக நடைபெற்றது.
இப்போராட்டத்தின் அன்றைய தினம் பொலிஸாரின் தலையீட்டினார் போராடமானது இடையில் கைவிடப்பட்டது மட்டக்களப்பு பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்து வந்த சோதனையின் பிரகாரம் என்னையும் எனது குழந்தைகளையும் நடைபெற 90 நாட்கள் சென்றாலும் அதன் பின்னர் உள்ள 91 ஆம் நாள் தொடரும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள்விரும்கின்றேன்.